search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்துப்பேட்டை விபத்து"

    முத்துப்பேட்டை அருகே பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்க்கரை சாலையில் சாயல்குடியிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்த பஸ்சில் குடித்து விட்டு பயணம் செய்த சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட்(வயது45) என்பவர் தவறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து அரசு பஸ்சின் கண்டக்டர் ராமநாதபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    முத்துப்பேட்டை அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் காசடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). இவர் ஆசாத்நகர் அருகே மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ஆலங்காடு அருகே சாலையின் குறுக்கே வந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அய்யப்பன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    ×